கரட்டாண்டி

சுள்ளென்று கண்கூசும் மதிய வெயில்
இயக்கங்களை முடக்கி கானல்நீராய் ஓட
பட்ட மரக்கிளையொன்றில் அரைக்கண்
நித்திரையிலிருக்கிறது அந்தக் கரட்டாண்டி
கிளை இலைகளின் நிழல் நகர்ந்தபின்னும்
வெயில் உறைக்காது அசைவின்றி
இருக்கிறது கரட்டாண்டி
இருக்கிறது கரட்டாண்டி
கரட்டாண்டியாய் பிறந்திருந்தால்
எப்படியிருக்கும் என
அசை போடுகிறது மனது
அவ்வளவாய் பசிக்காதோ?
நிழல் தேடி நகருமுன் சிறு
நிழல் தேடி நகருமுன் சிறு
கல்லெறிந்து பார்த்தேன்
கரட்டாண்டி பயமின்றி இருந்தது
தேவைகள் ஜீவாதாரங்களோடு மட்டும்
கரட்டாண்டி பயமின்றி இருந்தது
தேவைகள் ஜீவாதாரங்களோடு மட்டும்
நிற்காததால் கரட்டாண்டிபோல்
ஓரிடத்தில் நிற்க முடியாத வாழ்வு
சிங்கம்போல் பிடரி சிலிர்த்து
உறும வேண்டிய வேளைகளில் கூட
கரட்டாண்டியாய் அசைவற்றிருக்க
வேண்டியதாகிவிடுகிறது
முரண்களுடன் ஓடத் தேவையற்ற
கரட்டாண்டி அதிர்ஷ்டசாலிதான்!
***

