கல்

கலகலப்பான படித்துறைகளில்
அறையப்படும் ஆடைகள்
நுரை தள்ளுகின்றன
கரங்கள் நீரை விளாவ
கண்களின் நோட்டம்
கலங்கியிருக்கிறது நீர்
ஆற்றின் நடுவே மேடுதட்டி
சூரியனிடம் பேசுகிறது மணல்
அவ்வப்போது கடந்துசெல்லும்
வெங்காயத் தாமரைக் கூட்டமும்
கிழிந்த ஆடைகளும்
அக்கரையில் மசமசப்பாக
மக்கள் கூட்டம்
கானல்நீரின் பின்புறம்
காட்சி நெளிகிறது
கால்களை முத்தமிடும்
மீன்கள்
மேலிருந்து சொருக்கடிக்கும்
பையன்கள்
துண்டை விரித்து மீன்பிடிக்கும்
சிறுமிகள்
கொக்குகள் போட்ட
மீன்கூடுகளைக் கொத்தும்
காகங்கள்
மணற் குழிகளில்
வெந்நீரில் தவிக்கும்
மீன்குஞ்சுகள்
எல்லா இயக்கங்களையும்
பார்த்துக்கொண்டு அமைதியாக
நீரைக்கிழித்து நிற்கிறது
துருத்திக்கொண்டிருக்கும்
அந்தக் கல்!


2 comments:
கல்லுக்கும் உயிர் கொடுக்கும் கவிதை..
என்னோட சாம்பிள் பாக்குறீங்களா?
அந்தக் கல்
கருப்பு...
மிதந்து வருது
செருப்பு...
அங்க நிக்கிறான்
பருப்பு...
தாமரை மீது
வெறுப்பு...
தலைதொட நினைக்கும் தண்ணீருக்கு
மறுப்பு...
இதனைத்தையும் பார்ப்பதே - அதன்
சிறப்பு.
ஜி.
நன்றி.
உங்க சாம்பிளும் சூப்பருங்கோ!
(கல்லால) அடிச்சுத் தாக்குங்க. :)
Post a Comment