Wednesday, December 24, 2008

ஒற்றை நிலா


முழுநிலா ஒளிர இருளில் நிழலாகச்
சத்தமின்றிப் பறக்கின்றன வவ்வால்கள்
ஆடாதிருக்கின்றன மரங்கள்
வைரக் கண்களுடன் மாமரப் பொந்தில்
அமர்ந்திருக்கிறது ஆந்தை
மண்வெளிகள் சலனமற்றிருக்கப்
புதர்களுக்கிடையே ஓடுகிறது நரி
மெதுவாய் அடிவைத்துப் பாய்ந்து கவ்விய
எலியுடன் தாவி மறைகிறது கரும்பூனை
தாமதமாக கூடு திரும்பும் பறவைக் கூட்டம்
மயானத்திலிருந்து மெல்லியதாய்
உயர்ந்தெழும்புகிறது புகை
என் காலடியைப் பற்றிக்கொண்டு
கூட வருகிறது நிழல்

ஒற்றைகளாய் நானும் உயரே நிலாவும்
ஊருறங்கும் நடுநிசியில் திக்கற்று
நடக்கின்றோம் மௌனமாக

***

0 comments: