இலையுதிர் காலம்
தீப்பிடித்தாற்போலிருக்கின்றன மரங்கள்
சரசரவென்று ஒலியெழுப்பும்
இலைச்சருகுகள் மீது நடக்கையில்
குளிர்ந்து வீசுகிறது காற்று
கழுத்துப்பட்டையை நிமிர்த்திக்
கைகளைச் சட்டைப்பைகளில் திணித்து
இதம் தேடி நடக்கின்றேன்
இலைகள் மொத்தமும் உதிர்ந்து
எலும்புக்கூட்டு மரங்கள்
அசைவற்ற கல்லறைகளாய்
மோன நிலையில் நிற்கின்றன
எப்போதாவது தலைகாட்டும் சூரியனின் கதிர்கள்
இலைகளற்ற மரக்கிளைகளினூடே பாய்ந்து
இன்னும் அதிகமாக வெளிச்சமாக்க
வந்தே வந்துவிடும் பனிக்காலம்
பருத்தி அறுவடைக்காலம்போல
பஞ்சுப் பொதிகளாய் விழும் பனி
மாசுக்களைத் துடைத்தெடுத்து
நிறங்களை மறைத்து எங்கெங்கும்
வெண்போர்வை போர்த்திவிடும் பனி
நீராவியாய் வெளிவரும் மூச்சுக் காற்று
கால்சராய்ப் பட்டிகளையும்
கனத்த காலணிகளையும்
ஏமாற்றி நுழையும் பனித்துளி
உடனுருகி உள்ளங்காலில் சில்லிக்கச்
சட்டென இயற்கைமேல் எழும் கோபம்
அப்பனித்துளி வாழ்ந்த கணமே வாழ்ந்து
இலையுதிர்வது போல மனதிலிருந்து உதிரும்
மனதின் கடந்த சில நினைவுகள் மட்டும்
இலைகள்போலல்லாது உதிர்வதேயில்லை
***



3 comments:
இதையும் ரசித்தேன்.
வரிகளோடு பயணம் செய்ய முடிகிறது.
வாழ்த்துக்கள்.
Yes , i go with what Mr. Mathavaraj has commented.very beautifull...Every Kavithai of yours leaves a good feel after reading it....
best wishes,
durga.v
hey super boss. i really like this.
my blog. i have some kavithai.
http://alanselvam.blogspot.com/
http://alanselvampunchdialogues.blogspot.com
plz check and give your comments
Post a Comment