மனத் தனியன்
இடப்புறம் ஒருக்களித்து இரவோடு
படுத்திருக்கிறேன் தனிமையில்
வலது விழியோரம் நீர் கசிந்து
இடவிழி சேர்ந்து கனக்க
இமை மீறிக் கண்ணீர்
காதை நனைத்துக் கரைய
மனதும் கரைந்தது - ஆனாலும்
கரையாது கல்லாய்ச் சமைந்திருக்கின்றன
சில நினைவுகள் மட்டும்
கண்களைக் கசித்துக்கொண்டு
பிரிவென்னும் நரகத்திலுழல்வது
மகாகவிக்கு மட்டும் நிகழ்வதில்லை
எனக்கும் என் போன்ற சாமான்ய
மனத் தனியர்களெல்லாருக்கும்
***



0 comments:
Post a Comment