Sunday, October 09, 2011

அலகிலாக் காதல்



உன் என நினைக்குமுன்னே
உள்ளில் நிகழும் நெகிழ்வையும்
என் எனச் சொல்லுமுன்னே
என்னில் நீ நிறைவதையும்
எனக்கெல்லாம் நீயே என்பதை
எவ்வார்த்தையும் சிக்காதிருந்தும்
யாருஞ் சொல்லாச் சிற்பமாய்
வடித்திடத் துடிக்கிறதென் நெஞ்சு

வயிற்றிலெப்போதும் பறக்கும்
பேசாப் பட்டாம் பூச்சிகளின்
தவிப்பினைத் தூவும் இச்சிறு
வரிகளின் நிழலில் ஆவேசமாயுன்
வருகைக்காகக் காத்திருக்கிறதென்
அலகிலாக் காதல்

1 comments:

Selvam Muniyandi said...

you kavithai lines are simply super. i written some tamil kavithai. please check and give ur comments

http://alanselvam.blogspot.com/